Ethir varum sevvai kilamai anru G.C.E. O/L
pareetcha Aarambikka pada ullathu athanal ithanai kavanaththil kollavum!
பரீட்சைக்கு நாம் எப்படி தயாராவது?
...
பரீட்சை நெருங்கிக்கொண்டு இருக்கிறது.
பத்திரிக்கையிலும்,தொலைக்காட்சியிலும் எப்படி படிக்க வேண்டும் என்ற
அறிவுரைகளை தொடங்கி விட்டார்கள். நாமும் நமது பங்கிற்கு எப்படி படிக்க
வேண்டும் என்பதை தெளிவு படுத்த இருக்கிறோம். அரசு சலுகை சரிவர கிடைக்காமல்
தங்கள் பிள்ளைகளை பல சிரமங்களுக்கிடையில் படிக்க வைத்துக்கொண்டு இருக்கும்
பெற்றோர்களுக்காகவும் ,மாணவ, மாணவியருக்காகவும் இந்த கட்டுரையை
எழுதுகிறோம். கவனமாக படியுங்கள்...
பெற்றோர்களின் கவனத்திற்கு:
முதலில் தங்களின் வரவேற்பு அறையில் இருக்கும் தொலைக்காட்சி பெட்டி
நிகழ்ச்சிகளை தாங்களும் பார்க்காதீர்கள். பிள்ளைகளையும் பார்க்க
விடாதீர்கள். முடிந்தளவு தொலைக்காட்சியை நல்ல நிகழ்ச்சிகளுக்கும்,
செய்திகளை தெரிந்து கொள்ளவும் மட்டும் பயன்படுத்துங்கள்.
பரீட்சைக்கு நாம் தயாராவது எப்படி:
திட்டமிடும் காரியத்தைத்தான்
ஒழுங்காக நாம் செய்ய முடியும். வெளியூருக்கு போகுமுன் டிக்கெட் முன்பதிவு
செய்கிறோம். ஊரில் செல்லும் இடங்களை முன் கூட்டியே திட்டமிட்டு விடுகிறோம்.
அந்த ஊரில் போய் திட்டமிடுவதில்லை. அதுபோல் ஒவ்வொரு தேர்வின்
பாடத்திற்கும் குறிப்பிட்ட நாட்களை ஒதுக்கி ஒரு அட்டவணை தயார் செய்து
அதன்படி உங்கள் பாடங்களை பல பகுதிகளாக பிரித்து படித்து முடித்து
விடுங்கள். மாணவ மாணவியர்களே! நீங்கள் மிக முக்கியமாக கவனத்தில் வைத்துக்
கொள்ள வேண்டியது. ஒரு கேள்விக்கான பதிலை படித்து முடித்தவுடன் படித்ததை
உடனடியாக ஒரு நோட்டில் எழுதி பார்த்துக் கொள்ளுங்கள்.
இதுதான்
உங்களுக்கு பரீட்சையில் கைகொடுத்து உங்களுக்கு வெற்றியை கிடைக்கச்
செய்யும். இதை தவிர வெறும் மனப்பாடம் எந்த வகையிலும் பயன் அளிக்காது.
படித்ததை இரவு நேரங்களில் எழுதிப் பாருங்கள். எழுதிப்பார்ப்பதில்
கவனக்குறைவாக இருந்து விடாதீர்கள்.
நாட்கள் இருக்கிறது படித்துக்
கொள்ளலாம் என்று இருந்து விடாதீர்கள். காலத்தை வீண் விரயம் செய்யாமல்
படிக்க ஆரம்பித்து விடுங்கள். சென்று போன நாட்கள் திரும்பி வராது என்பதை
நினைவில் கொண்டு உங்களின் ஒரு வருட படிப்பிற்காக நீங்கள் பயன்படுத்திய
மணித்துளிகள் எத்தனை அந்த மணித்துளிகளில் சில மணி நேரங்கள்தான் உங்களின்
தேர்வுக்கான நேரம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.
படிக்கும்
நேரங்கள்:
பெற்றோர்களே பிள்ளைகளை விடிய விடிய படி படி என்று
தொல்லை கொடுக்காதீர்கள். கண் விழித்து படிப்பதால் உடலில் தொந்தரவுகளும்,
மனச்சோர்வும்தான் ஏற்படும். அப்படி படித்தாலும் மனதில் அதிக நாட்களுக்கு
படித்தது ஞாபகம் இருக்காது. அதனால் இரவு 10அல்லது 10:30க்குள் படித்து
முடித்து விட்டு உறங்கச் சொல்லுங்கள். விடியற்காலை 3:30அல்லது 4 மணிக்கு
எழுந்த வெது வெதுப்பான நீரில் குளித்து விட்டு 2 ரக்காஅத் நபில் தொழுது
இறைவனிடம் உதவி தேடிய பிறகு படிக்கச் சொல்லுங்கள்.
இந்த நேரத்தில்
மூளை சுறுசுறுப்பாக இருக்கும். படிப்பதும் நன்றாக மனதில் பதியும்.காலையில்
ஒரு மணி நேரம் படிப்பது மற்ற நேரத்தில் 3 மணி நேரம் படிப்பதற்கு சமம்
ஆகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். எவ்வளவு நேரம் படிக்கலாம் என்பதை
அவரவர் வசதிக்கு தக்கவாறு நிர்ணயம் செய்து கொள்ளலாம். பள்ளி நாட்களில் 7
முதல் 8 மணி நேரமும் விடுமுறை நாட்களில் 10 முதல் 13 மணி நேரம் என்று
தனித்தனியாக நேரங்களை பிரித்து அந்த நேரங்களில் படிக்கலாம்.
உடல்
ஆரோக்கியம்:
உடலுக்கு தூக்கம் அவசியமான ஒன்று. இரவில் 5 மணி நேரம்
தூங்குங்கள். மதியம் அரை மணி நேரம் குட்டித்தூக்கம் போடுங்கள். இது
தொடர்ந்து கவனம் செலுத்துவதற்கு உதவியாக இருக்கும்.எண்ணெய் உணவுகளை அதிகம்
சாப்பிட்டால் மந்தம் ஏற்படும். அதனால் எண்ணெய் பொருட்களை மிக குறைவாக
சாப்பிடுங்கள். ஹோட்டல் உணவுகள், ஃபாஸ்ட் புட் உணவுகளை அறவே தவிர்த்து
விடுங்கள். தூங்காமல் படிப்பதற்கு அடிக்கடி டீ, காபி அதிகம் குடிப்பீர்கள்,
இதனால் சுறுசுறுப்பு ஏற்படும்.
அதே நேரத்தில் உடலில் பித்தத்தை
அதிகப்படுத்தி விடும். குறைவாக டீ, காபி குடிப்பது நல்லது. இதைவிட சூடான
பால் குடிப்பது சிறந்தது. பகல் நேரங்களில் மோர், இளநீர், பழச்சாறுகள்
அவரவர் வசதிக்கேற்றவாறு குடிக்கலாம். நொறுக்குத்தீனி எதுவும்
சாப்பிடாதீர்கள். எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளை மிதமான அளவில்
நேரத்திற்கு சாப்பிட்டு விடுங்கள்.
நினைவாற்றலுக்கு கை கொடுக்கும்
உணவு:
மூளை நரம்பில் நியூரான் என்ற செல் உள்ளது. இந்த செல்தான்
கேட்பது, பார்ப்பது, உணர்வது போன்றவற்றை ஒருங்கிணைக்கும். இதற்கு பி1
வைட்டமின் தேவை. இதில் உள்ள தியாமின் என்ற புரதம் நினைவாற்றல் பெருக உதவி
செய்கிறது. தியாமின் குறைபாடு ஏற்பட்டால் நினைவாற்றலில் குறை ஏற்படும்.
அதனால் தியாமின் அதிகமுள்ள கோதுமை, கடலை,தானியங்கள், பச்சைபட்டாணி,
சோயாபீன்ஸ் போன்றவைகளை அதிகம் சாப்பிட வேண்டும். காய்கறிகள், பழங்களையும்
அதிக அளவு சாப்பிட வேண்டும்.(எங்க உம்மாவே காய்கறி சாப்பிடமாட்டார்கள்
எனக்கு எப்படி இதையெல்லாம் தருவார்கள் என்று நினைக்க வேண்டாம் - உம்மாவிடம்
அவசியத்தை எடுத்து கூறுங்கள்). உணவுதான் இயற்கை மருந்து முடிந்தளவு அவரவர்
வசதிக்கேற்றவாறு தியாமின் உணவுகளை சாப்பிட முயற்சித்தால் மூளையின் சக்தி
குறையாது. நினைவாற்றலும் பெருகும். தங்களால் முடிந்தவரை
பின்பற்றுங்கள்.(வைத்தியனிடம் கொடுக்கும் பணத்தை வாணிபனிடம்
(அரிசி,மளிகைபொருட்கள், காய்கறி,பழங்கள் விற்பவர்)கொண்டு போய் கொடுத்து
ஆரோக்கியமாக இருங்கள் என்பது பழமொழி).
பரீட்சை ஹாலில்:
பரீட்சை பேப்பர் வாங்கியவுடன் முதலில் தேர்வின் எண், பெயர், பாடம், நாள்
இவைகளை தெளிவாக பேப்பரில் எழுதி விடுங்கள். பிறகு கேள்வித்தாளை
வாங்கியவுடன் பதற்றபடாமல் விடை தெரிந்த கேள்விகளை டிக் செய்து கொள்ளுங்கள்.
பிஸ்மில்லாஹ் சொல்லி முதலில் தெரிந்த கேள்விகளுக்கு கேள்வித்தாளில் உள்ள
எண்களை கவனமாக பேப்பரில் எழுதி கையெழுத்து அடித்தல், திருத்தல் இல்லாமல்
அழகான முறையில் பதிலை எழுதுங்கள். பிறகு தெரியாத கேள்விகளை யோசித்து
எழுதுங்கள். எல்லாம் எழுதி முடித்த பிறகுஅண்டர்லைன் இட வேண்டிய இடங்களில்
அண்டர்லைன் போடுங்கள். பெல் அடிக்கும் வரை ஹாலில் இருந்து மீண்டும்
மீண்டும் கேள்வித்தாளையும் எழுதிய பேப்பரையும் படித்து பாருங்கள். விட்ட
கேள்விகளுக்கும் பதில் ஞாபகம் வரும். தவறாக எழுதி இருந்தால் திருத்திக்
கொள்ளலாம். பெல் அடிப்பதற்கு முன் பேப்பரை கொடுத்து விடாதீர்கள்.
No comments:
Post a Comment